காரைக்குடியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர். டி. கே.. பிரபு ஆலோசனையின் படி, த வெ க கட்சி நிர்வாகிகள் தீயூர் கண்ணன், மும்பை செந்தில் , குணாபாண்டியன், மின்னல் மாரி, பனக்கரை முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சரின் தந்தை துரை. கருணாநிதி, தாயார் சாஸ்வதி கருணாநிதி, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் காளிமுத்து தலைமையில், கிட் அண்டு கிம் கல்லூரி நிறுவனர்
வி. அய்யப்பன், மற்றும் அப்லிப்ட் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் மரிங்கிபட்டி க.ரமேஷ் , சிவகங்கை கிழக்கு மாவட்ட நிர்வாகி நேதாஜி சிவா மற்றும் சார்லஸ், தாய் கார் சர்வீஸ் செந்தில் மற்றும் சேதுபதி மற்றும் மாவட்ட கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் சோபியா பிளாரன்ஸ் ஆகியோர் முன்னிலையில் , இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்வில் த.வெ.க கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




