சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட (10). வயது சிறுவனின் பெற்றோர் தனலட்சுமி – மீனாட்சிசுந்தரம் தம்பதியரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சிறுவனின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மேலும், சிறுவனின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு ஆகியோருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், தங்கள் குழந்தைக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர், விஸ்வகர்மா சங்கத்தினர், காரைக்குடி மக்கள் மன்றம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




