சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பதற்கும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கையாக சென்னை, மதுரை, தூத்துக்குடி, பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பணியாற்றி வந்த இயற்கை வளத் துறை மாவட்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளச் சுரங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல், கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், புதிய மாவட்டங்களில் பொறுப்பேற்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வள மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




