சிவகங்கை: டாக்டர் டி.கே. பிரபு அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சிவகங்கை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும், கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் டாக்டர் டி.கே. பிரபு அவர்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புடைய குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகின்றது. சந்திப்பின் போது மாநில வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





