செங்கல்பட்டு: தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளை சார்ந்த 80 மாற்றுத்திறனாளி களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் விழா செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வெள்ளாடு ஆடுகள் வழங்கினார்.
மேலும் செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனை அருகில் பேருந்து பயணிகளின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியிலிருந்து பேருந்து நிழற்குடையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் எஸ் நரேந்திரன் நகர மன்ற உறுப்பினர்கள் சந்தியா சந்தோஷ் கண்ணன் ராஜி உள்பட 33 வார்டுகளை சேர்ந்த வட்ட செயலாளர்கள் நகர மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்களும் கட்சியினரும் நன்றி தெரிவித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





